பிரார்த்தனைகள் மற்றும் பாராட்டுகள் (பிலே 1: 4-7)
பிரார்த்தனைகள் மற்றும் பாராட்டுகள் (பிலே 1: 4-7):
பவுல்
பிலேமோனையும் அவருடன் இருப்பவர்களையும் தன் பிரார்த்தனைகளில் நினைத்துக் கொள்வதாகவும், தான் எப்போதும் அவர்களுக்காகத் தேவனிடம் நன்றி செலுத்துவதாகவும் எழுதுகிறார்.
மேலும் கர்த்தராகிய இயேசுவிடம் அவர்கள் கொண்ட விசுவாசத்தையும் தேவனுடைய பரிசுத்தமான அனைத்து மக்களிடமும் அவர்கள் கொண்ட அன்பையும் பற்றித் தான் கேள்விப்படுவதாகவும், அவர்கள் விசுவாசத்துக்கும் அன்புக்கும் தேவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் பவுல் எழுதுகிறார். இயேசுவில் தாங்கள் கொண்டுள்ள எல்லா நல்லவற்றையும் அவர்கள் புரிந்து கொள்ள, அவர்கள் பகிர்ந்து கொள்ளும் விசுவாசம் உதவட்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகவும்
குறிப்பிடுகிறார். பிலேமோனின் வீட்டில் இருந்த ஐக்கியம் கர்த்தராகிய இயேசுவின் மீதும் சக மனிதர்களின் மீதும் உண்மையான அன்புடன் சிறந்து இருந்தது, மேலும் கர்த்தராகிய இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக அது ஒருவருக்கொருவர் நம்பகமானதாகவும் இருந்தது. பவுல் அவர்களை நினைவுகூரும் போதெல்லாம் அவர்களுக்காகத் தொடர்ந்து கடவுளைத் துதிக்கிறார், ஏனெனில் அவர்களின் உண்மைத்தன்மையுடன் இருந்தார்கள் மற்றும் கிறிஸ்துவின் மீதான அவர்களின் நம்பிக்கையின் காரணமாகத் தயவுடன் இருந்தார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் விசுவாசத்தின் சாட்சியையும் ஒப்புக்கொண்டு அறிவிக்கும்போது, அது பலனளிக்கும் என்று பவுல் அவர்களுக்காக ஜெபிக்கிறார், ஏனென்றால் அனைவருக்கும் நல்லது எதுவோ அதை அறிந்து பின்பற்றுவதற்குத் தேவையான முழுமையான அறிவு அவர்களுக்கு உள்ளது, இதன் மூலம் கிறிஸ்து மகிமைப்படுத்தப்படுகிறார்.
பவுல்
பிலேமோனை ஒரு சகோதரன் என்று அழைப்பதன் மூலம் குறிப்பிட்ட சிலவற்ரை அவருக்கு எழுதுகிறார், அதாவது அவர் தேவனுடைய மக்களிடம் அன்பாக இருந்துள்ளார். அவர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளார். இது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். பிலேமோன் பவுலின் நெருங்கியவுடன் ஊழியராக இருந்து, சுவிசேஷத்திற்காக ஒன்றாக உழைத்திருக்கிறார், அவருடன் சகோதர அன்பைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பவுல் அவருடன் எப்படி மகிழ்ந்தார், எவ்வளவு நன்றாக உணர்ந்தார் என்பதை நினைவுகூர்ந்து ஒப்புக்கொள்கிறார். கர்த்தராகிய இயேசு மற்றும் அவருடைய கிருபையின் மீதான விசுவாசத்தால் தெரிந்துக்கொள்ளப்பட்ட
விசுவாசிகளுக்குப் பிலேமோன் அதிக விருந்தோம்பல் அளிப்பவரும் மற்றும் அணுகக்கூடியவராகவும் இருந்துள்ளார், இதன் மூலம் அவர்கள் தங்கள் வேலையைத் தொடர ஊக்குவிக்கப்பட்டு இருக்கிறார்கள், பவுல் அதன் காரணமாகவும் மேலும் மகிழ்ச்சியடைகிறார்.
சுய பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்
1.
பவுல் எப்போது கடவுளுக்கு நன்றி கூறினார்?
2.
பிலேமோனுக்காகவும் அவரோடு இருந்தவர்களுக்காகவும்
பவுல் ஏன் கடவுளுக்கு நன்றி கூறினார்?
3.
பிலேமோனும் அவரோடு இருந்தவர்களும் எப்படி தங்கள் அன்பையும் விசுவாசத்தையும் காட்டுகிறார்கள்?
4.
பவுல் எதற்காக ஜெபிக்கிறார்?
5.
‘இயேசுவில் தாம் கொண்டுள்ள எல்லா நல்லவற்றையும் புரிந்து கொள்ள’ என்று பவுல் கூறுவதன் அர்த்தம் என்ன?
6.
பிலேமோனிடமிருந்து பவுல் என்ன பெற்றார்?
7.
பிலேமோனின் அன்பிலிருந்து பவுல் ஏன் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் பெற்றார்?
8.
பிலேமோன் மற்றும் அவரோடு இருந்தவர்களின் நல்ல பண்புகள் என்ன?
கருத்துகள்
கருத்துரையிடுக